நூல்கள்›அகநானூறு›பாடல் 1966

பாடல் 1966

மதுரைப் பேராலவாயார்

தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,

கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்

படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,

நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,

குடுமி நெற்றி நெடு மரச் சேவல் . . . .

தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,

கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்

எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,

அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,

குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம் . . . .

நனி நீடு உழந்தனை மன்னே! அதனால்

உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற

வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச்

சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,

தாழ் இருங் கூந்தல் நம் காதலி . . . .

நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே!

களிற்றியானை நிரை

← பாடல் 1965பாடல் 1967 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்