நூல்கள்›அகநானூறு›பாடல் 1965

பாடல் 1965

நல்லாவூர் கிழார்

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை

பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரி,

கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை . . . .

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

கேடு இல் விழுப் புகழ் நாள் தலை வந்தென,

உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,

பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர . . . .

புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடி,

'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என,

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி . . . .

பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,

வதுவை நல் மணம் கழிந்த பின்றை,

கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,

'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,

ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல் . . . .

கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து

ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,

முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,

அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என . . . .

இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,

செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,

அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,

ஒய்யென இறைஞ்சியோளே மாவின்

மடம் கொள் மதைஇய நோக்கின் . . . .

ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே

களிற்றியானை நிரை

← பாடல் 1964பாடல் 1966 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்