நூல்கள்›அகநானூறு›பாடல் 1963

பாடல் 1963

மதுரை எழுத்தாளன்

மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்

பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,

தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,

மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர

இரு நிலம் கவினிய ஏமுறுகாலை . . . .

நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,

அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,

நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்

புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்

சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே . . . .

எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,

அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு

கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்

தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்

அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து . . . .

வினைவயின் பெயர்க்கும் தானை,

புனைதார், வேந்தன் பாசறை யேமே!

களிற்றியானை நிரை

← பாடல் 1962பாடல் 1964 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்