நூல்கள்›அகநானூறு›பாடல் 1962

பாடல் 1962

கல்லாடனார்

வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்

சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,

கறை அடி மடப் பிடி கானத்து அலற,

களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,

கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து . . . .

பெரும் பொழி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,

நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,

நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்

கல்லா இளையர் பெருமகன் புல்லி

வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் . . . .

சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,

எய்த வந்தனவால்தாமே நெய்தல்

கூம்பு விடு நிகர் மலர் அன்ன

ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே!

களிற்றியானை நிரை

← பாடல் 1961பாடல் 1963 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்