நூல்கள்›அகநானூறு›பாடல் 1955

பாடல் 1955

பரணர்

மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,

தண் துறை ஊரன் எம் சேரி வந்தென

இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு

நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை

அவை புகு பொருநர் பறையின், ஆனாது . . . .

கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில்,

கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,

வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,

சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ?' என,

ஆதிமந்தி பேதுற்று இனைய . . . .

சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்

அம் தண் காவிரி போல,

கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே

களிற்றியானை நிரை

← பாடல் 1954பாடல் 1956 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்