நூல்கள்›அகநானூறு›பாடல் 1953

பாடல் 1953

மதுரைக் கவுணியன் பூதத்தனார்

வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து,

போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,

தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,

குருதி உருவின் ஒண் செம் மூதாய்

பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப . . . .

பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ

வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,

வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,

கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை

மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து . . . .

"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,

இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,

வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்

நின் வலித்து அமைகுவென் மன்னோ அல்கல்

புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற் . . . .

கல்லாக் கோவலர் ஊதும்

வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக் காலே!

களிற்றியானை நிரை

← பாடல் 1952பாடல் 1954 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்