நூல்கள்›அகநானூறு›பாடல் 1951

பாடல் 1951

எருமை வெளியனார் மகனார் கடலனார்

இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்

துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,

மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்

பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,

குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை . . . .

இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,

ஆறே அரு மரபினவே; யாறே

சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;

கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,

'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து . . . .

ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,

ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,

இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை

நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த

மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் . . . .

வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,

உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,

அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக

வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த

நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் . . . .

ஆனா அரும் படர் செய்த

யானே, தோழி! தவறு உடையேனே!

களிற்றியானை நிரை

← பாடல் 1950பாடல் 1952 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்