நூல்கள்›அகநானூறு›பாடல் 1943

பாடல் 1943

ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்

களையும் இடனால் பாக! உளை அணி

உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா

வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,

தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,

ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் . . . .

வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,

செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல

கடு நீர் வரித்த செந் நில மருங்கின்,

விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,

பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி . . . .

மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு

உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,

ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,

கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்

ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை . . . .

புலம்பு கொள் மாலை கேட்டொறும்

கலங்கினள் உறைவோள் கையறு நிலையே

களிற்றியானை நிரை

← பாடல் 1942பாடல் 1944 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்