நூல்கள்›அகநானூறு›பாடல் 1941

பாடல் 1941

பரணர்

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன

நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்,

ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,

மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன

மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு . . . .

பேயும் அறியா மறை அமை புணர்ச்சி

பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,

கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,

கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று

நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல . . . .

நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்

ஆகம் அடைதந் தோளே வென் வேற்

களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி

ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்

கடவுள் எழுதிய பாவையின் . . . .

மடவது மாண்ட மாஅயோளே!

களிற்றியானை நிரை

← பாடல் 1940பாடல் 1942 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்