நூல்கள்›அகநானூறு›பாடல் 1933

பாடல் 1933

மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்

விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,

வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம் பெயற்

காரும் ஆர்கலி தலையின்று. தேரும்

ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,

வள் வாய் ஆழி உள் உறுபு உருள . . . .

கடவுக காண்குவம் - பாக! மதவு நடைத்

தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,

கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,

படு மணி மிடற்ற பய நிரை ஆயம்

கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் . . . .

கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க,

மனைமனைப் படரும் நனை நகு மாலை,

தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்

பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்

புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் . . . .

நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,

'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!

பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,

வருகுவைஆயின், தருகுவென் பால்' என,

விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி . . . .

திதலை அல்குல் எம் காதலி

புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே

களிற்றியானை நிரை

← பாடல் 1932பாடல் 1934 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்