நூல்கள்›அகநானூறு›பாடல் 1928

பாடல் 1928

வண்ணப்புறக் கந்தரத்தனார்

'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்

அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,

முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,

கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த

கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி . . . .

குறுக வந்து, குவவுநுதல் நீவி,

மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்

நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,

பல் கால் முயங்கினள் மன்னே! அன்னோ!

விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி . . . .

வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய

மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்

காடு உடன்கழிதல் அறியின் தந்தை

அல்குபதம் மிகுத்த கடிஉடை வியன் நகர்,

செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல . . . .

கோதை ஆயமொடு ஓரை தழீஇ,

தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்

ஆடுவழி ஆடுவழி, அகலேன் மன்னே!

களிற்றியானை நிரை

← பாடல் 1927பாடல் 1929 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்