நூல்கள்›அகநானூறு›பாடல் 1926

பாடல் 1926

ஆலம்பேரி சாத்தனார்

அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப

வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து

எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை

அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,

கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி . . . .

விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து,

அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்

வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,

அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்

ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின் . . . .

குறு நடைப் புறவின் செங் காற் சேவல்

நெடு நிலை வியன் நகர் வீழ்துணைப் பயிரும்

புலம்பொடு வந்த புன்கண் மாலை,

'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி,

இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன் . . . .

மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்

சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்

வேய் புரை பணைத் தோள், பாயும்

நோய் அசா வீட, முயங்குகம் பலவே.

களிற்றியானை நிரை

← பாடல் 1925பாடல் 1927 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்