நூல்கள்›அகநானூறு›பாடல் 1923

பாடல் 1923

குடவாயிற் கீரத்தனார்

வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்

தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;

முரண் செறிந்திருந்த தானை இரண்டும்

ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்

முன் இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது . . . .

ஊர்க, பாக! ஒரு வினை, கழிய

நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,

துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,

பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு

அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர் . . . .

பருந்து படப் பண்ணி, பழையன் பட்டெனக்,

கண்டது நோனானாகித் திண் தேர்க்

கணையன் அகப்படக் கழுமலம் தந்த

பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி

அழும்பில் அன்ன அறாஅ யாணர் . . . .

பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,

பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,

தண் குடவாயில் அன்னோள்

பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!

களிற்றியானை நிரை

← பாடல் 1922பாடல் 1924 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்