நூல்கள்›அகநானூறு›பாடல் 1922

பாடல் 1922

மதுரையாசிரியர் நல்லந்துவனார்

கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை

சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,

என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி

கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,

நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி . . . .

குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது

கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,

தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே

கொய் அகை முல்லை காலொடு மயங்கி,

மை இருங் கானம் நாறும் நறு நுதல் . . . .

பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை

நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்

அளியரோ அளியர்தாமே - அளி இன்று

ஏதில் பொருட்பிணிப் போகி, தம்

இன் துணைப் பிரியும் மடமையோரே! . . . .

களிற்றியானை நிரை

← பாடல் 1921பாடல் 1923 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்