நூல்கள்›அகநானூறு›பாடல் 1917

பாடல் 1917

வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,

தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,

அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்

கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,

வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன் . . . .

வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்

தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று

ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்

ஆடாமையின் கலுழ்பு இல தேறி,

நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் . . . .

கண் என மலர்ந்த சுனையும், வண் பறை

மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக் குரல்

குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி

கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து;

பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ தேய்கு . . . .

'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்

கூஉம் கணஃது எம் ஊர்' என

ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே

களிற்றியானை நிரை

← பாடல் 1916பாடல் 1918 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்