நூல்கள்›அகநானூறு›பாடல் 1918

பாடல் 1918

மதுரைச் செங்கண்ணனார்

'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,

உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்

முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,

நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்

ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து . . . .

ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி

படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை

முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்

காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,

அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு . . . .

மதர் புலி வெரீஇய மையல் வேழத்து

இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு,

ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென,

கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,

அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் . . . .

பரந்து படு பாயல் நவ்வி பட்டென,

இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,

நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,

'இன்னகை! இனையம் ஆகவும், எம்வயின்

ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின் . . . .

கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,

நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,

வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்

ஏற்று ஏக்கற்ற உலமரல்

போற்றாய் ஆகலின், புலத்தியால், எம்மே! . . . .

களிற்றியானை நிரை

← பாடல் 1917பாடல் 1919 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்