நூல்கள்›அகநானூறு›பாடல் 1915

பாடல் 1915

மதுரை நக்கீரர்

பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்

கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,

ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்

கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,

அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி . . . .

தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,

கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,

நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!

வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,

திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் . . . .

நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு

வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,

கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்

ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,

சேரல், செம்பியன், சினம் கெழு திதியன் . . . .

போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,

நார் அரி நறவின் எருமை யூரன்,

தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்

இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று

எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் . . . .

முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,

கொன்று, களம்வேட்ட ஞான்றை,

வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!

களிற்றியானை நிரை

← பாடல் 1914பாடல் 1916 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்