நூல்கள்›அகநானூறு›பாடல் 1913

பாடல் 1913

மதுரை மருதன் இளநாகனார்

சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்

கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,

தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன

இரு திரி மருப்பின் அண்ணல் இரலை

செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் . . . .

மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,

தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,

மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்

பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,

செல்க, தேரே நல் வலம் பெறுந! . . . .

பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி

துறை விட்டன்ன தூ மயிர் எகினம்

துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,

செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,

'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என . . . .

இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென

மழலை இன் சொல் பயிற்றும்

நாணுடை அரிவை மாண் நலம் பெறவே

களிற்றியானை நிரை

← பாடல் 1912பாடல் 1914 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்