நூல்கள்›அகநானூறு›பாடல் 1907

பாடல் 1907

பாண்டியன் அறிவுடைநம்பி

மெய்யின் தீரா மேவரு காமமொடு

எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!

கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே

அருவி ஆன்ற பைங் கால் தோறும்

இருவி தோன்றின பலவே நீயே . . . .

முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,

பரியல் நாயொடு பல் மலைப் படரும்

வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்

பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,

கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி . . . .

ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,

'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,

பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்,

உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.

களிற்றியானை நிரை

← பாடல் 1906பாடல் 1908 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்