நூல்கள்›அகநானூறு›பாடல் 1906

பாடல் 1906

மதுரைக் கணக்காயனார்

"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை

ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்

கானம் கடிய என்னார், நாம் அழ,

நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,

செல்ப" என்ப என்போய்! நல்ல . . . .

மடவை மன்ற நீயே; வடவயின்

வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,

மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்

கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன

நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் . . . .

தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப

யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்

தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்

பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,

வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் . . . .

குருதியொடு துயல்வந்தன்ன நின்

அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?

களிற்றியானை நிரை

← பாடல் 1905பாடல் 1907 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்