நூல்கள்›அகநானூறு›பாடல் 1908

பாடல் 1908

வெள்ளாடியனார்

"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,

கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம் படின்

வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த

தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்ப,

செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று . . . .

இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்

மாவின் நறு வடி போல, காண்தொறும்

மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்

நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,

வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண் . . . .

தாழக் கூறிய தகைசால் நல் மொழி

மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின்

எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க

வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி

வெம்மை தண்டா எரி உகு பறந்தலை . . . .

கொம்மை வாடிய இயவுள் யானை

நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,

அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்

உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,

எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு . . . .

நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு

உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,

மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!

களிற்றியானை நிரை

← பாடல் 1907பாடல் 1909 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்