நூல்கள்›அகநானூறு›பாடல் 1901

பாடல் 1901

வெறிபாடிய காமக்கண்ணியார்

'அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்

கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்

மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்

இது என அறியா மறுவரற் பொழுதில்,

படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை . . . .

நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,

முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,

களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,

வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,

உருவச் செந்தினை குருதியொடு தூஉய் . . . .

முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,

ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த

சாரற் பல் பூ வண்டு படச் சூடி,

களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்

ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல . . . .

நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை

தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,

இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,

நக்கனென் அல்லெனோ யானே எய்த்த

நோய் தணி காதலர் வர, ஈண்டு . . . .

ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?

களிற்றியானை நிரை

← பாடல் 1900பாடல் 1902 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்