நூல்கள்›அகநானூறு›பாடல் 1899

பாடல் 1899

உலோச்சனார்

பெருநீர் அழுவத்து எந்தை தந்த

கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,

எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,

செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,

ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் . . . .

தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,

கொண்டல் இடு மணல் குரவை முனையின்

வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,

மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்

பல் பூங் கானல் அல்கினம் வருதல் . . . .

கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,

கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை

கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை,

எல்லையும் இரவும் என்னாது, கல்லென

வலவன் ஆய்ந்த வண் பரி . . . .

நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.

களிற்றியானை நிரை

← பாடல் 1898பாடல் 1900 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்