நூல்கள்›அகநானூறு›பாடல் 1898

பாடல் 1898

பொருந்தில் இளங்கீரனார்

அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி

வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து

உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,

உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்

கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம் . . . .

எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,

ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது,

செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே

மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்

சேயிதழ் அனைய ஆகி, குவளை . . . .

மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,

உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,

பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்

வெய்ய உகுதர, வெரீஇ, பையென,

சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை . . . .

பூவிழ் கொடியின் புல்லெனப் போகி,

அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,

இயங்காது வதிந்த நம் காதலி

உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!

களிற்றியானை நிரை

← பாடல் 1897பாடல் 1899 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்