நூல்கள்›அகநானூறு›பாடல் 1895

பாடல் 1895

சாகலாசனார்

நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்

தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,

மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,

நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,

யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை . . . .

தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!

கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்

காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,

பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,

'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து . . . .

கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,

'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?

நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்

கரைய, வந்து விரைவனென் கவைஇ

களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா . . . .

நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்

பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து

அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்

மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?

களிற்றியானை நிரை

← பாடல் 1894பாடல் 1896 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்