நூல்கள்›அகநானூறு›பாடல் 1887

பாடல் 1887

பெருங்குன்றூர் கிழார்

ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த

குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை

தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,

பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,

அரிய அல்லமன் இகுளை! 'பெரிய . . . .

கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை

பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்

கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு

வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,

படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய . . . .

பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்

விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,

எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,

மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,

துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் . . . .

சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,

நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,

அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே

களிற்றியானை நிரை

← பாடல் 1886பாடல் 1888 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்