நூல்கள்›அகநானூறு›பாடல் 1885

பாடல் 1885

பரணர்

அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,

அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,

இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,

மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,

பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் . . . .

கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,

குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,

வேழ வெண் புணை தழீஇ, பூழியர்

கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாங்கு,

ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, . . . .

நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,

'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,

மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,

மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்

முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! . . . .

சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,

அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,

வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,

முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,

பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் . . . .

இளமை சென்று தவத் தொல்லஃதே;

இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?

களிற்றியானை நிரை

← பாடல் 1884பாடல் 1886 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்