நூல்கள்›அகநானூறு›பாடல் 1883

பாடல் 1883

குறுங்குடி மருதனார்

முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு

பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,

இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,

பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,

மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப . . . .

கருவி வானம் கதழ் உறை சிதறி,

கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.

குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,

நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த . . . .

தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,

மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,

உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,

கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,

நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் . . . .

போது அவிழ் அலரின் நாறும்

ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே

களிற்றியானை நிரை

← பாடல் 1882பாடல் 1884 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்