நூல்கள்›கலித்தொகை›பாடல் 1870

பாடல் 1870

அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்

வேட்டவை செய்து, ஆங்கு, காட்டி மற்று ஆங்கே,

அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன்

திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று

அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி . . . .

அணி நலம் பாடி வரற்கு;

ஓரொருகால் உள்வழியள் ஆகி, நிறை மதி

நீருள் நிழல் போல், கொளற்கு அரியள் போருள்

அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்

மன்றம் படர்வித்தவள் வாழி, சான்றீர்! . . . .

பொய் தீர் உலகம் எடுத்த கொடிமிசை,

மை அறு மண்டிலம் வேட்டனள் வையம்

புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்

இன்னா இடும்பை செய்தாள்; அம்ம, சான்றீர்!

கரந்தாங்கே இன்னா நோய் செய்யும்; மற்று இஃதோ . . . .

பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு;

இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும்

கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் வடி நாவின்

வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க்

கல்லாமை காட்டியவள்; வாழி, சான்றீர்! . . . .

என்று, ஆங்கே,

வருந்த மா ஊர்ந்து, மறுகின்கண் பாட,

திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே,

பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அருந் திறை

போல, கொடுத்தார், தமர். . . . .

நெய்தற் கலி

← பாடல் 1869பாடல் 1871 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்