நூல்கள்›கலித்தொகை›பாடல் 1858

பாடல் 1858

தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால்,

பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்,

எல் உறு தெறு கதிர் மடங்கி, தன் கதிர் மாய;

நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,

அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா . . . .

மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர;

எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை;

பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர்ப் பனிக் கடல்!

'தூ அறத் துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம்

நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் . . . .

காதல் செய்து அகன்றாரை உடையையோ? நீ

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்!

'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய

என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல

இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? நீ . . . .

பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்!

'இனி வரின், உயரும்மன் பழி' எனக் கலங்கிய

தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல

இனிய செய்து அகன்றாரை உடையையோ? நீ

என ஆங்கு, . . . .

அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்பட,

பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!

வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்

மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்

அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே. . . . .

நெய்தற் கலி

← பாடல் 1857பாடல் 1859 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்