நூல்கள்›கலித்தொகை›பாடல் 1859

பாடல் 1859

'நயனும், வாய்மையும், நன்னர் நடுவும்,

இவனின் தோன்றிய, இவை' என இரங்க,

புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட

அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,

நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செய, . . . .

கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்,

புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை;

இம் மாலை,

ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என்

கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்! . . . .

இம் மாலை,

இருங் கழி மா மலர் கூம்ப, அரோ, என்

அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்!

இம் மாலை,

கோவலர் தீம் குழல் இனைய, அரோ, என் . . . .

பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்!

என ஆங்கு,

படு சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை,

குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை

விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் . . . .

தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே;

நெய்தற் கலி

← பாடல் 1858பாடல் 1860 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்