நூல்கள்›கலித்தொகை›பாடல் 1857

பாடல் 1857

'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று,

வாடை தூக்க, வணங்கிய தாழை

ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,

நளி இருங் கங்குல், நம் துயர் அறியாது,

அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும் . . . .

கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போல,

புதுவது கவினினை' என்றியாயின்,

நனவின் வாரா நயனி லாளனைக்

கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி:

'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என் . . . .

நலம் தாராயோ?' என, தொடுப்பேன் போலவும்,

கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி,

'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும்;

'முலையிடைத் துயிலும் மறந்தீத்தோய்' என,

நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும், . . . .

'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' என,

தலையுற முன் அடிப் பணிவான் போலவும்;

கோதை கோலா, இறைஞ்சி நின்ற

ஊதைஅம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும்,

'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே, . . . .

'பேதையைப் பெரிது' எனத் தெளிப்பான் போலவும்;

ஆங்கு

கனவினால் கண்டேன் தோழி! 'காண் தகக்

கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்

நனவின் வருதலும் உண்டு' என . . . .

அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே.

நெய்தற் கலி

← பாடல் 1856பாடல் 1858 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்