நூல்கள்›கலித்தொகை›பாடல் 1844

பாடல் 1844

'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,

நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,

கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்

புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்

முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! . . . .

கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்

வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,

அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,

அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ;

அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், . . . .

நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,

நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்

சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த

பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,

பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா! . . . .

ஈங்கு எவன் அஞ்சுவது;

அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்

அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்

வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில்

வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், . . . .

அல்கலும் சூழ்ந்த வினை.'

முல்லைக் கலி

← பாடல் 1843பாடல் 1845 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்