நூல்கள்›கலித்தொகை›பாடல் 1757

பாடல் 1757

'பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும்

நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல்,

தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்கண்

தோடுறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெற,

செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு, . . . .

தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல்

வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான்

விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின்,

பிரிந்து உள்ளார் அவராயின், பேதுறூஉம் பொழுதாயின்,

அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது . . . .

வருந்த, நோய் மிகுமாயின் வணங்கிறை! அளி என்னோ?

புதலவை மலராயின், பொங்கரின வண்டாயின்,

அயலதை அலராயின், அகன்று உள்ளார் அவராயின்,

மதலை இல் நெஞ்சொடு மதனிலள் என்னாது

நுதல் ஊரும் பசப்பாயின் நுணங்கிறை! அளி என்னோ? . . . .

தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின்,

மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின்,

பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது

பாயல் நோய் மிகுமாயின் பைந்தொடி! அளி என்னோ?'

என ஆங்கு, . . . .

ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு

நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும்

தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்,

பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே.

பாலைக் கலி

← பாடல் 1756பாடல் 1758 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்