நூல்கள்›கலித்தொகை›பாடல் 1735

பாடல் 1735

மரையா மரல் கவர, மாரி வறப்ப-

வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,

சுரை அம்பு, மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம்,

உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்-

தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் . . . .

கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால்,

என், நீர் அறியாதீர் போல இவை கூறல்?

நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும்,

அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு

துன்பம் துணையாக நாடின், அது அல்லது . . . .

இன்பமும் உண்டோ , எமக்கு?

பாலைக் கலி

← பாடல் 1734பாடல் 1736 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்