நூல்கள்›கலித்தொகை›பாடல் 1731

பாடல் 1731

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,

அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,

மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்

கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்

உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின், . . . .

சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்

ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்

ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை-

மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,

இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்றைஇய! . . . .

தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என,

மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ

நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்,

முலை ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை;

இல் என, இரந்தார்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, . . . .

கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ-

தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்

புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை;

இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என,

கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ- . . . .

வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்

தட மென் தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை;

என, இவள்

புன் கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல்

அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்று, . . . .

காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல்

யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின்

தொல் கவின் தொலைதல் அஞ்சி, என்

சொல் வரைத் தங்கினர், காதலோரே.

பாலைக் கலி

← பாடல் 1730பாடல் 1732 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்