நூல்கள்›நற்றிணை›பாடல் 1727

பாடல் 1727

அம்மூவனார்

தோளும் அழியும், நாளும் சென்றென;

நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக்

கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து

அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;

நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று . . . .

யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ

சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவின்

பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்,

மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே.

பாலை

← பாடல் 1726பாடல் 1728 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்