நூல்கள்›நற்றிணை›பாடல் 1724

பாடல் 1724

அவ்வையார்

மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து,

அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,

பொன் செய் கொல்லனின், இனிய தௌர்ப்ப,

பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்,

வன் பரல் முரம்பின், நேமி அதிர . . . .

சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே;

இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்

குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு

நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே? . . . .

முல்லை

← பாடல் 1723பாடல் 1725 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்