நூல்கள்›நற்றிணை›பாடல் 1723

பாடல் 1723

கோவூர் கிழார்

நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்

கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க,

பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து,

வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்,

கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி . . . .

வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,

நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன்

இரவின் வரூஉம் இடும்பை நாம் உய,

வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப,

நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன் . . . .

நேர்வர்கொல் வாழி - தோழி! - நம் காதலர்

புதுவர் ஆகிய வரவும், நின்

வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே?

குறிஞ்சி

← பாடல் 1722பாடல் 1724 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்