நூல்கள்›நற்றிணை›பாடல் 1722

பாடல் 1722

மதுரை மருதன் இளநாகனார்

கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை

புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,

மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்

துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்

பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் . . . .

பெண்ணை வேலி, உழை கண் சீறூர்

நல் மனை அறியின், நன்றுமன்தில்ல;

செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த

கானலொடு அழியுநர் போலாம் - பானாள்,

முனி படர் களையினும் களைப . . . .

நனி பேர் அன்பினர் காதலோரே.

நெய்தல்

← பாடல் 1721பாடல் 1723 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்