நூல்கள்›நற்றிணை›பாடல் 1720

பாடல் 1720

அவ்வையார்

வாளை வாளின் பிறழ, நாளும்

பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்

கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த

வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை

ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ . . . .

விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ;

யாணர் ஊரன் காணுநன்ஆயின்,

வரையாமைஓ அரிதே; வரையின்,

வரைபோல் யானை, வாய்மொழி முடியன்

வரை வேய் புரையும் நல் தோள் . . . .

அளிய - தோழி! - தொலையுந பலவே.

மருதம்

← பாடல் 1719பாடல் 1721 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்