நூல்கள்›நற்றிணை›பாடல் 1719

பாடல் 1719

காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

வேங்கையும் புலி ஈன்றன; அருவியும்

தேம் படு நெடு வரை மணியின் மானும்;

அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்

களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை

ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென . . . .

'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்

காவல் நீ' என்றோளே; சேவலொடு

சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்

முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல

நன் பொன் இமைக்கும் நாடனொடு . . . .

அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.

குறிஞ்சி

← பாடல் 1718பாடல் 1720 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்