பாடல் 1718
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
அம்ம வாழி, தோழி! - நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே - நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் . . . .
கடல் மீன் தந்து, கானற் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து,
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி,
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே? . . . .
நெய்தல்