நூல்கள்›நற்றிணை›பாடல் 1717

பாடல் 1717

பொதும்பில் கிழார் மகனார்

நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,

அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,

ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்

கல்லா மழவர் வில்லிடை விலங்கிய

துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் . . . .

வருவர் வாழி - தோழி! - செரு இறந்து

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த

வேல் கெழு தானைச் செழியன் பாசறை

உறை கழி வாளின் மின்னி, உதுக்காண்,

நெடும் பெருங் குன்றம் முற்றி . . . .

கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே.

பாலை

← பாடல் 1716பாடல் 1718 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்