நூல்கள்›நற்றிணை›பாடல் 1713

பாடல் 1713

கோளியூர்கிழார் மகனார் செழியனார்

கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை

அலங்கல்அம் தொடலை அன்ன குருளை

வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி

புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,

உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள் . . . .

அருளினை போலினும், அருளாய் அன்றே

கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்

பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு,

ஓங்கு வரை நாட! நீ வருதலானே.

குறிஞ்சி

← பாடல் 1712பாடல் 1714 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்