நூல்கள்›நற்றிணை›பாடல் 1709

பாடல் 1709

குடவாயிற் கீரத்தனார்

புன் தலை மந்தி கல்லா வன் பறழ்

குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,

எரி அகைந்தன்ன வீ ததை இணர

வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய

தேம் பெய் தீம் பால் வெளவலின், கொடிச்சி . . . .

எழுது எழில் சிதைய அழுத கண்ணே,

தேர் வண் சோழர் குடந்தைவாயில்

மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த,

பெயல் உறு நீலம் போன்றன விரலே,

பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது . . . .

ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்

ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த

காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே.

குறிஞ்சி

← பாடல் 1708பாடல் 1710 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்