நூல்கள்›நற்றிணை›பாடல் 1708

பாடல் 1708

வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

யாமமும் நெடிய கழியும்; காமமும்

கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல்

முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய,

பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்;

ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும் . . . .

இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய்

அயல் இற் பெண்டிர் பசலை பாட,

ஈங்கு ஆகின்றால் - தோழி! - ஓங்கு மணல்

வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து,

பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி . . . .

பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு

நாடாது இயைந்த நண்பினது அளவே

நெய்தல்

← பாடல் 1707பாடல் 1709 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்