நூல்கள்›நற்றிணை›பாடல் 1703

பாடல் 1703

கபிலர்

முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,

புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை

மை படு மால் வரை பாடினள் கொடிச்சி,

ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு

சூருடைச் சிலம்பின் அருவி ஆடி . . . .

கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்

பா அமை இதணம் ஏறி, பாசினம்

வணர் குரற் சிறு தினை கடிய,

புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே?

குறிஞ்சி

← பாடல் 1702பாடல் 1704 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்