நூல்கள்›நற்றிணை›பாடல் 1702

பாடல் 1702

உலோச்சனார்

அழிதக்கன்றே - தோழி! - கழி சேர்பு

கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,

வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,

அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,

கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு . . . .

அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட

அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி,

அன்னை தந்த அலங்கல் வான் கோடு

உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு

இனையல் என்னும்' என்ப - மனை இருந்து . . . .

இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்

திண் திமில் விளக்கம் எண்ணும்

கண்டல் வேலிக் கழி நல் ஊரே.

நெய்தல்

← பாடல் 1701பாடல் 1703 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்