நூல்கள்›நற்றிணை›பாடல் 1700

பாடல் 1700

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

வாராய், பாண! நகுகம் - நேரிழை

கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,

நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்

விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,

'புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் . . . .

திதலை அல்குல் முது பெண்டு ஆகி,

துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி?' என,

பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,

உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல,

முகை நாண் முறுவல் தோற்றி . . . .

தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.

மருதம்

← பாடல் 1699பாடல் 1701 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்